August 10, 2015

மீட்கப்படுவது தாஜூடீனின் சடலாம் என்பதில் சந்தேகம்?

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் சடலம் இன்றைய தினம் தோண்டப்பட உள்ளது.

தெஹிவளை வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மையவாடியில் தாஜூடீனின் சடலம் அடக்கம் செய்யப்பட்டிருந்தது.
எனினும், கொலையாளிகள் தாஜூடீனின் சடலத்தை அழித்திருக்கலாம் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சடலம் அந்த இடத்தில் புதைக்கப்பட்டதா அல்லது வேறும் சடலம் இடப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்த கொலை தொடர்பிலான உண்மைகளை மூடி மறைப்பதற்கு கொலையாளிகள் சடலத்தை வேறு இடத்தில் புதைத்திருக்கவோ அல்லது அடையாளம்தெரியாமல் அழித்திருக்கவோ கூடிய சாத்தியங்கள் மிக அதிகம் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தாஜூடீன் கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய வகையிலான தொலைபேசி வழியானஉரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த குரல் பதிவுகள் குற்ற விசாரணைப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
Dath-Wasem-04

No comments:

Post a Comment