August 24, 2015

தழிழீழம்தான் நிரந்தரத் தீர்வு! டாக்டர் ராமதாஸ்!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவால் தமிழர்க்கு எந்த பயனும் இல்லை, உலகெங்கிலும் வாழும் ஈழத் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி தனித் தமிழீழம் அமைக்க ஐ.நா.நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை  யில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. எந்த கட்சியும் ஆட்சிய மைக்கும் அளவுக்கு பெரும்பா ன்மை பெறவில்லை.
எனினும், தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க பிரதமராவது உறுதியாகிவிட்டது.
இலங்கை ஜனாதிபதி தேர்த லில் தோல்வியடைந்து பதவியை பறிகொடுத்த நிலையில், பிரதமர் பதவியைக் கைப்பற்றலாம் என்ற எண்ணத்தில் காய் நகர்த்திய மகிந்த ராஜபக்ஷவின் கனவுகளும் கலைந்து விட்டன.
தமது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ள மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி உறுப்பினராக செயற் படப் போவதாக அறிவித்துள்ளார்.
வழக்கம் போலவே தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக வாக்குகளைக் கைப்பற்றியுள்ளது. 15 இற்கும் மேற்பட்ட இடங்கள் அக்கட்சிக்கு கிடைத்துள்ளது.
இலங்கைத் தேர்தலில் தமிழர் களுக்கு சாதகமான அம்சம் ஏதே னும் உண்டு என்றால், அது மகி ந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட தோல் விதான்.
ஜனாதிபதியாக இருந்த போது ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமி ழர்களை படுகொலை செய்த மகி ந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதம ரானால், அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு தமிழர்களுக்கு எதிராக செயற்படுவார் என்று தமி ழர்கள் அஞ்சினர்.
இத்தகைய சூழலில் மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்திருப்பது தமிழர்களுக்கு ஓரளவு நிம்மதி யைத் தந்துள்ளது. இதைத் தவிர வேறு எந்த நன்மையும் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படப்போவதி ல்லை  என்பது தான் உண்மை யாகும்.
இலங்கைத் தேர்தல் முடிவுகள் உலகத்திற்கு சொல்லும் பாடம் என்னவெனில், அந்நாட்டில் சிங் கள இனத்தவரும், தமிழர்களும் ஒற்றுமையாக வாழ முடியாது என் பதுதான்.
இந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணி யும், விக்கிரமசிங்க தலைமை யிலான அணியும் தமிழர்களுக்கு எதிராகவும், சிங்கள இனவெ றியை தூண்டும் வகையிலும் பரப்புரை மேற்கொண்டன. இதன் பயனாக சிங்களவர்கள் வாக்கு களை இரு கட்சிகளும் சரிசமமாக பகிர்ந்து கொண்டனர்.
அதேபோல் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புதான் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதன்மூலம் சிங்களவர்களை ஆதரிக்கத் தயாரில்லை என்பதை தமிழர்களும், தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கத் தயாராக இல்லை என்பதை சிங்களவர்களும் மீண் டும் ஒரு முறை தெரிவித்திருக்கின்றனர்.
இதே நிலை தொடர்ந்தால் தமிழர்கள் தொடர்ந்து கொத்த டிமைகளாகவே வாழ நேரிடும். இதன்பிறகும் இரு இனத்தினரும் ஒன்றாக வாழ்வது பொருந்தா கூட்டணியாகவே இருக்கும்.
எனவே,  உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களிடையே பொதுவாக் கெடுப்பு நடத்தி தனித் தமிழீழம் அமைக்க ஐ.நா. அமைப்பு நடவ டிக்கை எடுக்க வேண்டும். அது தான் இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment