August 28, 2015

தமிழின அழிப்புக்கு நீதி கோரி அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐநா நோக்கிய மாபெரும் பேரணி!(படம் , வீடியோகள் இணைப்பு)

எதிர்வரும் 21.09.2015 அன்று ஐநா மன்றத்துக்கு முன்பாக ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் மீண்டும் ஒருமுறை ஒருமித்த குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டிய காலத்தின் கடமையில் உலகத் தமிழினமாகிய நாம் நிற்கின்றோம்
. ஐநா பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரித்தானியாவில் இருந்தும் மனித நேய ஈருருளிப்பயணம் எதிர்வரும் திங்கள் கிழமை ஆரம்பிக்க இருக்கிறது .இவ் வேளையில் ஒட்டுமொத்த மக்களின் அரசியல் அபிலாசையை வெளிப்படுத்தும் முகமாக அனைத்து தமிழ் மக்களும் ஐநா நோக்கி செல்ல வேண்டிய தருணத்தில் நிற்கின்றோம் . ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் ஐநா நோக்கி புறப்பட அவர்களுக்கான வாகன ஒழுங்குகளை ஒவ்வொரு நாடுகளில் உள்ள தேசிய செயற்பாட்டாளர்கள் மேற்கொள்கின்றனர் .
ஐநா நோக்கிய நீதிக்கான போராட்டத்துக்கு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் மீண்டும் அதிவேக தொடரூந்து ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .எதிர்வரும் 4.09.2015 அன்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி போராட்டம் ஒன்றும் நடைபெற உள்ளது . அன்றைய தினம் ஐநா நோகிய மனித நேய ஈருருளிப்பயணம் அங்கு வந்தடையும் .




No comments:

Post a Comment