August 13, 2015

சிறிலங்காவில் தமிழர்கள் மீதான சித்திரவதைகள் தொடர்கின்றன – அனைத்துலக மனித உரிமை அமைப்பு!

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னரும், சிறிலங்காவில் தமிழர்கள் பாதுகாப்பு தரப்பினரால்
துன்புறுத்தப்பட்டுள்ளனர்.பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் துன்புறுத்தலில் இருந்து சுதந்திரம் பெறும் தன்னார்வ நிறுவனம் தமது அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு முதல் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற பாதுகாப்பு தரப்பினரின் துன்புறுத்தல்கள் தொடர்பில் இந்த அறிக்கையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
148 சம்பவங்கள் இந்த ஆய்வில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் அதிக அளவான துன்புறுத்தல்கள் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
எனினும் இந்த நிலைமையை மாற்றுவதாக உறுதியளித்த மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்றதன் பின்னரும் அந்த நிலை தொடர்கின்றது.
இதேவேளை இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு உள்ளானவர்களுள் 3ல் 1 பங்கினர், பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட தமிழர்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் முகம் கொடுக்கும் இந்த நிலைமையை மாற்றுவதற்கு தீர்க்கமான சர்வதேச அழுத்தம் அவசியப்படுவதாகவம் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment