August 29, 2015

சர்வதேச விசாரணைக்காக தமிழர்கள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க முடியும்: சீ.வி.கே.சிவஞானம்

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணைகளுக்கு அமெரிக்காவின் தெற்காசிய பிரதி செயலாளர் பிஸ்வால் அழுத்தம் கொடுக்கின்றபோதும், தமிழர்களைப் பொறுத்தவரை, தொடர்ந்தும் சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க முடியுமென வடமாகாண சபையின் தவசாளர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் அது உள்ளக விசாரணையைக்கு அழுத்தத்தை பிரயோகிக்க முடியும்.
அதேபோல தமிழர்களை பொறுத்தவரை சர்வதேச விசாரணைக்கான அழுத்தத்தை கொடுக்க முடியும் என்றும் சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் முழுமையாக இல்லாவிட்டாலும் சர்வதேச விசாரணை என்ற விடயம் தற்போது நீராகிபோயுள்ளது என்றும் அவர் இந்திய செய்தித்தாள் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்று வடமாகாண சபை பிரேரணை ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
இதற்கு மாறாக பிரேரணை ஒன்றை வடமாகாண சபை நிறைவேற்றாது என்றும் அவர் உறுதிப்படக்கூறியுள்ளார்.

No comments:

Post a Comment