August 9, 2015

மனித உரிமைகள் ஆணையாளருக்கு சிவாஜிலிங்கம் எழுதிய கடிதம்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரியே அவர் குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
ஜெனீவாவில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில், போர்க்குற்றங்கள் குறித்த அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் வௌியிட திட்டமிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான வரலாற்றுத் தோல்வி முறைகளை கருத்தில் கொண்டு அந்த அறிக்கையை தயாரிக்குமாறு தான் கோரிக்கை விடுப்பதாக அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
எம்.கே.சிவாஜிலிங்கம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சையாகக் களமிறங்கியுள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் குருநாகல் மாவட்டத்திலேயே போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
sivaji-un-letter

No comments:

Post a Comment