August 9, 2015

இலங்கைக்கு தற்போது செல்ல வேண்டாம்: பல நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது !

அமெரிக்கா தனது நாட்டுப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பெரும் அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புகள்
உள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பயண எச்சரிக்கையை பிரித்தானியா பிரான்ஸ் உட்பட மேலும் சில நாடுகள் விடுத்துள்ளார்கள். இருப்பினும் 2 வாரங்களுக்கு அன் நாட்டுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும். ஏற்கனவே அங்கே சென்றுவிட்டவர்கள் மிகவும் ஜாக்கிரதைதாக இருக்க வேண்டும் என்றும் அமெரிக்கா தனது பிரஜைகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான அறிக்கை ஆகும். இம்மாதம் 17ம் திகதி இலங்கையில் தேர்தல் நடக்க உள்ளது. ஆனால் ஆங்காங்கே பல இடங்களில் கொலை மற்றும் அடிதடி சம்பவங்கள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

No comments:

Post a Comment