August 9, 2015

சமஷ்ட்டியை வழங்காத அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை இல்லை - சுரேஷ்!

சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வை ஏற்றுக் கொள்ளதாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வே சரியானதாக அமையும்.

முன்னர் தனி ஈழம் கோரி போராட்டம் நடத்தப்பட்டது.

ஆனால் தற்போது தமிழ் மக்கள் ஒரே நாட்டுக்குள் சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

சமஷ்ட்டி என்பது நாட்டை பிரிக்கும் செயற்பாடு இல்லை.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு இனக்குழுக்களை கொண்ட நாடுகள் இவ்வாறான சமஷ்ட்டி அடிப்படையிலான நடைமுறையை அமுலாக்கி இருக்கின்றன.

சிறிலங்கா மாத்திரம் எதற்கான இதனை நிராகரிக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment