August 25, 2015

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் நாத்தண்டியவில் பரபரப்பு. (படங்கள் இணைப்பு)!

நாத்தண்டிய - வலஹாபிடிய பிரதேசத்தில் தலை வெட்டி அகற்றப்பட்ட நிலையில் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இச்சடலம் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.

சிகப்பு நிற காட்சட்டை அணிந்த நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு கொல்லப்பட்ட நபருக்கு 35 வயதிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு இங்கு கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இக் கொலை தொடர்பில் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது .

மேலும் சடலத்தை அடையாளம் காணும் நடவடிக்கையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.Nathandiya-headless 01Nathandiya-headless 02

No comments:

Post a Comment