August 24, 2015

ஊழல், மோசடிகள் குறித்து ஆஜராகுமாறு கோத்தபாயவுக்கு அழைப்பாணை!(படங்கள் இணைப்பு)

பாரிய ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அவரை இன்று ஆணைக்குழு முன் அஜராகுமாறு
அறிக்கப்பட்டுள்ளது.
ரக்னா லங்கா நிறுவனம் சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே கோத்தபாயவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 9.30 அளவில் ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆணைக்குழுவின் முன்னிலையில் கோத்தபாய ஆஜர்
அழைப்பாணையை அடுத்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். இரு பாதுகாப்பாளர்களுடனே வருகை தந்துள்ளார்.
இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கோத்தபாய, இது எல்லாம் எனக்கு ஒரு சிறிய விடயம் என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment