August 29, 2015

காலியில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி, இன்னொருவர் படுகாயம்!

காலியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இன்னொருவர் படுகாயமடைந்துள்ளார்.
காலி மாவட்டத்தின் நெளுவை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெல்லவ பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பழைய குடும்பப் பகை ஒன்றின் காரணமாகவே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றவர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிசார், சந்தேக நபர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment