August 8, 2015

யாழ்.தொண்டமனாறு பகுதியில் 50 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது!

யாழ்.தொண்டமனாறு பகுதியில் கஞ்சா கடத்தி வந்த 4 பேர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் இன்றைய தினம் மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறிய வகை லொறி ஒன்றில் குடாநாட்டின் நகர்ப்பகுதிக்கு எடுத்து வருவதற்காக இருந்த கஞ்சா போதைப்பொருள் 50 கிலோவே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment