August 9, 2015

தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் 3 இலட்­சத்து 40 ஆயிரம் மாண­வர்கள்

இம்­முறை நடை­பெ­ற­வுள்ள தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்கு நாட­ளா­விய ரீதியில் 3 இலட்­சத்து 40 ஆயி­ரத்து 926 மாண­வர்கள் தோற்­ற­வுள்­ளனர்.
பாட­சா­லை­க­ளுக்கு மாண­வர்­களைத் தெரிவு செய்­வ­தற்கும் புல­மைப்­ப­ரிசில்
வழங்­கு­வ­தற்­கு­மாக தரம் 5 மாண­வர்­க­ளுக்­காக நடத்­தப்­படும் பரீட்சை எதிர்­வரும் 23 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது.
இப்­ப­ரீட்சை 2,907 பரீட்சை நிலை­யங்­களில் நடை­பெறும். பரீட்­சைக்கு தோற்றும் மாண­வர்­களில் 02 இலட்­சத்து 54 ஆயி­ரத்து 373 மாண­வர்கள்சிங்­கள மொழி மூலமும் 86 ஆயி­ரத்து 553 மாண­வர்கள் தமிழ் மொழி மூலமும் பரீட்­சைக்கு தோற்­ற­வுள்­ளனர்.
இப்­ப­ரீட்­சைக்­காக விண்­ணப்­பித்த பாட­சாலை விண்­ணப்­ப­தா­ரி­களின் பரீட்சை சுட்டெண் உள்­ள­டக்­கப்­பட்ட வரவு இடாப்­புக்கள் பாட­சாலை அதி­பர்­க­ளுக்கு தபாலில் அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­கவும் இது­வரை வரவு இடாப்­புக்கள் கிடைக்­காத பாட­சா­லைகள் இருப்பின் குறித்த பாட­சாலை அதி­பர்கள் தமது பாட­சாலை இலக்கம், முக­வரி என்­ப­வற்­றுடன் விண்­ணப்­ப­தா­ரி­களின் சகல தகவல்களையும் பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்புக்கிணங்க உடனடியாக எழுத்து மூலம் அறிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment