June 9, 2015

மன்னாரில் திடீரென முளைத்த புத்தர்சிலை!

மன்னார் தள்ளாடி பிரதான வீதியில் புத்தர் சிலை ஒன்றை இராணுவத்தினர் நிறுவியுள்ளனர். தள்ளாடி முகாமிற்கு இது முளைத்துள்ளது.
பொசன் தினத்தை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன், தள்ளாடி இராணுவத்தினரால் அந்த பகுதியில் பொசன் அலங்காரப்பந்தல்
அமைக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் இந்த புத்தரும் அதற்குள் முளைத்து விட்டார். பொசன் அலங்காரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்ட நிலையில், இப்பொழுது புத்தர்சிலை மாத்திரமே அங்கு உள்ளது.
அங்கு அரசமரம் ஒன்று நடப்பட்டு, சிறிய தூபி ஒன்றும் கல்லினால் அமைக்கப்பட்டுள்ளது.
13922_930099133720800_878145795778007998_nஇராணுவத்தனரின் இந்த நடவடிக்கைகள் இனவாதத்தை தூண்டும் செயல் என வர்ணித்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment