June 1, 2015

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு முன்னை நாள் தலைவர் சாவடைந்துள்ளார்!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் முன்னைநாள் தலைவரும் Neuilly-sur-Marne    தமிழ்ச் சங்க முன்னை நாள் தலைவரும் யாழ். தெல்லிப்பளை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-sur-Marne  I  வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவராஜா அவர்கள் 31-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று சாவடைந்துள்ளார்.

இவர் தமிழீழ விடுதலையை நேசித்து வந்ததுடன், தேசிய செயற்பாட்டு நிகழ்வுகளில் சிரத்தையுடன் பணியாற்றியும் வந்துள்ள ஒரு செயற்பாட்டாளராவார்.

அன்னாரது இறுதிவணக்க நிகழ்வுகள் பற்றி பின்னர் அறியத்தரப்படும் என பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment