வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாகப்பொங்கல் அண்மையில் நிறைவடைந்துள்ளது. வற்றாப்பளையில் கடல்நீரில் விளக்கெரியும் அற்புதம் நிகழ்வது எல்லோரும் அறிந்ததே.
இதுதவிர, அண்மைக்காலமாக வேறும்பல அதிசயங்கள பற்றி பக்தர்கள் பேசிக் கொண்டனர். வேம்பில் பால் சுரக்கும் அற்புதம், கிணற்றில் தண்ணீர் பொங்கி வழியும் அற்புதம் என பல அண்மையக்காலத்தில் நிகழ்ந்ததாக பக்தர்கள் மெய் சிலிர்க்கின்றனர்.
அந்தவரிசையில் மேலும் ஒரு அற்புதமும் இணைகிறது. இம்முறை அதுபற்றிய புகைப்பட ஆதாரங்களும் கிடைத்துள்ளன. பொங்கல் பானையில் சுற்றப்படும் கும்பநூல் பொங்கலிட்டு பானை இறக்கிய பின்னரும் தீயில் எரியாது அப்படியே இருந்த அதிசயத்தை கண்டு, அனைவரும் மெய்சிலிர்த்து போய்விட்டனர்.
No comments:
Post a Comment