வன்னிப்பகுதிகளில் யுத்தத்தின் பின்னர் உளநலம் பாதிக்கப்பட்டோரின் தொகை சடுதியாக அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாகவே வன்னிப்பகுதியில் இந்த அதிகரிப்பு காணப்பட்ட போதும், கிளிநொச்சியிலேயே இதன் தாக்கம் அதிகமென கூறப்படுகிறது.
இவ்வாறு உளநோய்க்காளானோரில் பலர் தற்கொலை செய்து கொள்வதை காணமுடிகின்றது. கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மலையாளபுரம் கிராம சேவையாளர் பிரிவில் மட்டும் கடந்த சில மாதங்களுக்குள் ஐந்து பேர்வரை உளநலப் பாதிப்பால் தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் பரந்தனிலுள்ள கிளிநொச்சி மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை ஆகியவற்றில் உளவள சிகிச்சைப்பிரிவுகள் இயங்கி வருகின்றன. இங்கு சிகிச்சை பெற வரும் மன நோயாளர்களின் தொகையும் அதிகரித்துக் காணப்படுகிறது.
No comments:
Post a Comment