June 9, 2015

யாழ். நீதிமன்றம் மீதான தாக்குதல்: 15 மாணவர்களுக்கு பிணை!

யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவர்கள் 15 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது, யாழ். நீதிமன்றத்தின் மீது  தாக்குதல் நடத்தியமையினாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இத்தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 47 சந்தேக நபர்கள் இன்று யாழ்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதில் 15 மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
ஏனைய 32 பேரும் எதிர்வரும் 18ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு அவர்களில் 12 பேர் தலா 5 இலட்சம் ரூபா ரொக்க பிணையிலும் இரு சரீரப் பிணைகளிலும், மூவரை தலா 2 இலட்சம் ரூபா ரொக்க பிணையிலும் இரு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு நீதவான் பெ.சிவகுமார் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment