June 9, 2015

வெலிக்கடை சிறைச்சாலை மோதல் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.!

2012 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழாமின் அறிக்கை இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி விமல் நம்புவசம் தலைமையில் இந்த குழாம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டது.
ஐந்து மாத காலப்பகுதியில் இந்த குழாம் சகல தரப்பினரின் சாட்சிகளையும் பெற்று கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து இந்த இறுதி அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment