June 4, 2015

13 வயது சிறுமி நான்கு மாத கருவை சுமக்கும் அவலம்!

வயிற்றுவலியென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 13 வயதான சிறுமி கர்ப்பந்தரித்திருக்கும் அதிர்ச்சி தகவலை வைத்தியர்கள் வெளியிட்டுள்ளனர். செவனகல பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 13
வயதான சிறுமி நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளமை தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, செவனகல பொலிசாருக்கு விடயம் அறிவிக்கப்பட்டது. பொலிசார் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், இதற்கு காரணமானவரை அடையாளம் கண்டனர். அதேபகுதியை சேர்ந்த 32 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே சிறுமியை இந்த நிலைக்கு உள்ளாக்கியுள்ளார்.
தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment