May 11, 2015

துன்னாலை தாமரைக்குளத்துக்கு அருகில் காவாலிகளின் அட்டகாசம் - நீதிமன்றம் நடவடிக்கை!

வடமராட்சி துன்னாலை தாமரைக்குளப் பகுதியில் கூடி நிற்கும் காவாலிகளால் அப்பகுதியில் உள்ள பெண்களும் மாணவிகளும் கடும் தொல்லைகளுக்கு உள்ளாகி வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த கல்வி
நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் பருத்தி்த்துறை நீதிமன்றுக்கு முறைப்பாடு தெரிவித்திருந்தார்கள்.
இதனடிப்படையில் முறைப்பாட்டைக் கருத்தில் எடுத்த பருத்தித்துறை மாவட்ட நீதிவான் மா.கணேசராசா இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் அப்பகுதியில் சுற்றித்திரிந்து பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் காவாலிகளைக் கைது செய்து நீதிமன்றில் ஆயர்ப்படுத்தும்படியும் நெல்லியடிப் பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment