May 26, 2015

தீவுப்பகுதிக்கு உல்லாசத்திற்காகக் காதலர்களுடன் சென்றவர்களை கற்பழித்த வித்தியாவின் கொலையாளிகள்!

தீவுப்பகுதியில் பெரும்பாலான இடங்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத காடுகளாகவும் தங்குவதற்கு சிறந்த மக்கள் அற்ற வீடுகள் இருக்கும் பகுதியாகவும் காணப்படுகின்றது.  இதனால் யாழ்ப்பாணப் பகுதிகளில் இருந்து வரும் காதலர்கள், கள்ளக்காதலர்கள்

குறித்த பகுதிகளில் தங்கியிருந்துவிட்டு செல்வது வழக்கம்.  புங்குடுதீவில் பிடிபட்ட நபர்களில் முக்கியமான இருவர் அப்பகுதிகளுக்கு வரும் காதலர்கள், கள்ளக்காதலர்கள் போன்றவர்களை பிடித்து அவர்களில் ஆணைக் கட்டி வைத்துவிட்டு அவனுடன் வந்த பெண்ணை பலராகச் சேர்ந்து கற்பழிப்பது வழக்கமாக இருந்துள்ளது. இவர்கள் தாங்கள் கற்பழிப்பதை எல்லாம் கைத் தொலைபேசியில் எடுத்து வைத்திருந்து சுவிஸ்சில் இருந்து வந்து தற்போது கைது செய்யப்பட்டுள்ள குமாரிடம் கையளித்து பெருமளவு பணம் பெற்றுக் கொள்வது வழக்கமாக இருந்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர். இதனைத் தட்டிக் கேட்காது விட்டதற்கு காரணம் அவர்கள் அப்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஈ.பி.டி.பியின் உறுப்பினர்களாகவும் ஆதரவாளர்களாகவும் இருந்த காரணத்தால் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இச் சம்பவங்கள் வெளியே தெரியவராததற்கு காரணம் இவர்களால் கற்பழிக்கப்பட்ட பெண்களும் தாக்குதலுக்குள்ளான ஆண்களும் கள்ளத்தனமாக  அப்பகுதிக்கு சென்று உல்லாசம் இருக்க நினைத்ததால் பாதிக்கப்பட்டவர்களும் இதனை வெளியே தெரிவிக்கவில்லை எனத் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment