May 19, 2015

சட்டவாளர் தமிழ்மாறனை பொதுமக்கள் முற்றுகை (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவில் நடந்த கூட்டம் ஒன்றுக்கு வந்திருந்த பிரபல சட்டவாளர் தமிழ்மாறனை பொதுமக்கள் முற்றுகையிட்டு, தடுத்து வைத்துள்ளனர்.

அவரே, குறிப்பிட்ட 10வது சந்தேக நபரை வெளிநாட்டுக்குத் தப்பிக்க வைக்க முனைவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


இந்தநிலையில், சம்பவ இடத்துக்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் குருகுலராசா உள்ளிட்டோர் பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றனர்.

இந்தநிலையில், தாம் 10வது சந்தேக நபரை கொழும்பில் வைத்து கைது செய்துள்ளதாக, சிறிலங்கா காவல்துறையினர் உறுதியளித்துள்ள போதிலும், அவரை யாழ்ப்பாணம் கொண்டு வந்தாலே சட்டவாளரை விடுவிப்போம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் புங்குடுதீவில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், அங்கு பெருமளவில் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment