May 13, 2015

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மீது தாக்குதல் முயற்சி(படம் இணைப்பு)

கூட்டமைப்பு உறுப்பினர் திருச்செல்வம் வன்முறையை தூண்ட முயற்சி திருகோணமலை மாவட்டம் ரால்குளி பகுதியில் இடம்பெற்று வந்த சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக அப்பகுதி மக்கள் வீதி மறியல் போராட்டம் நடத்தினர். 
அப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ஹரிகரன் மற்றும் மலைமுரசு பத்திரிகை ஆசிரியர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு முழு ஆதரவு வழங்கியிருந்தனர்.
அப்போது அவ்விடத்திற்க வந்த மைத்திரி அரசின் பங்காளிக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் திருச்செல்வம் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு வற்புறுத்தியிருந்தார். எனினும் பொது மக்கள் அதற்கு மறுத்ததுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து தொடர்ந்து போராட்டம் நடாத்தினர். 

அதனை சகித்துக் கொள்ள முடியாத திருச்செல்வம் தனது ஆதரவாளர்கள் சிலரை தூண்டி போராட்டக்காரர்கள் மீது கற்களை வீசுமாறு கூறி வன்முறையை உருவாக்க முயன்றுள்ளார். எனினும் அவரது முயற்சி வெற்றியளிக்கவில்லை.

No comments:

Post a Comment