May 13, 2015

சுன்னாகம் ரவுடிகளுக்கு பிணை வழங்குவதை எதிர்த்த பொலிசார் - மீண்டும் விளக்க மறியல் !

சுன்னாகம் மயிலிணி பகுதியில் அபாயகரமான ஆயுதங்களுடன் குழுச் சண்டையில் ஈடுபட்ட அறுவருக்கு பிணை வழங்க சுன்னாகம் பொலிஸார் ஆட்சேபனை தெரிவித்தமையடுத்து, எதிர்வரும் 25ஆம் திகதி விளக்கமறியில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன்,
செவ்வாய்க்கிழமை (12) உத்தரவிட்டார்.

கடந்த மாதம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து வாள்கள், பெற்றோல் குண்டுகள், கோடாரிகள் என்பன மீட்கப்பட்டதுடன் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்கள் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு மன்றில் கோரினார்.

சந்தேகநபர்கள் வெளியில் வந்தால், மீண்டும் குழப்பம் ஏற்படுத்தி குழு மோதலில் ஈடுபடுவார்கள் என பொலிஸார் ஆட்சேபனை தெரிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேகநபர்களுக்கு பிணை மறுக்கப்பட்டதுடன் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment