May 26, 2015

மட்டக்களப்பில் மக்களை பதிவு செய்யும் இராணுவம்!

மட்டக்களப்பில் பொது மக்களை வீடுவீடாக சென்று பதிவு செய்யும் நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. அண்மையில் ஆரயம்பதி – செல்வநகர் பகுதியில் இவ்வாறான பதிவு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன
.

குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் திரப்பட்டுள்ளன. முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களது பெயர் பட்டியலையும் அவர்கள் தங்களின் கைகளில் வைத்திருப்பதாக, ஆரயம்பதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆட்சி மாற்றத்தின் பின்னரும், தாங்கள் அனுபவித்த சிக்கலான நிலைமை தொடர்வதாகவும் அவர்கள் கவவை வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment