May 13, 2015

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தி.வேல்முருகன் பிரான்சு- பாரிஸ் நகரை வந்தடைத்தார்(படம் இணைப்பு)

முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம்’ ஆறாம் வருட நினைவேந்தலை புலம்பெயர்  தொப்பில் கொடி உறவுகளுடன் இணைந்து நினைவு கூற  தாய்த்தமிழகத்தில, ஈழத் தமிழர்களுக்காக பல போராட்டங்களை நடாத்தும்  "தமிழக  வாழ்வுரிமை கட்சியின்" தலைவர் திரு தி. வேல்முருகன் அவர்கள் இன்று 12 மே அன்று பிரான்சு- பாரிஸ் நகரை வந்தடைத்தார்.
அவரை பாரிஸ் விமான நிலையத்தில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயல்பாட்டாளர்கள் மற்றும்  பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை செயல்பாட்டாளர்கள் தமிழீழ தேசியக்கொடியுடன் சென்று வரவேற்றார்கள்.

பாரிஸில் மே 18 ஆம் திகதி நடைபெறும் தமிழின அழிப்பின் ஆறாம் ஆண்டு நினைவேந்தலில் திரு வேல்முருகன் கலந்து கொள்வதுடன் ஐரோப்பாவில் ஈழத் தமிழர் உறவுகளை சந்திக்க இவர் மிக ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவித்தார்.


No comments:

Post a Comment