May 18, 2015

அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற நினைவேந்தல்! (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு பெருமளவு மக்கள் திரண்டு வந்து இன்று வணக்கம் செலுத்தினர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கரைச்சி பிரதேசசபை உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

பா.உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை உபதவிசாளர், உறுப்பினர்கள், வர்த்தகர்கள், மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சி நிர்வாகிகள்  என பெருமளவானோர் திரண்டு வணக்கம் செலுத்தினர்.
இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பித்த நிகழ்வுகளில் முன்னதாக பொதுச்சுடரை முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின்  உறவுகள் ஏற்றியதை தொடர்ந்து சம நேரத்தில் வந்திருந்தவர்கள் சுடர்களை ஏற்றினர்.
தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து இந்து மற்றும் கிறிஸ்தவ மத பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
இந்து மதப்பிரார்த்தனையை ஒய்வுபெற்ற ஆசிரியையும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகருமான திருமதி.செல்வராணி நடத்தினார். கிறிஸ்தவ மதப் பிரார்த்தனையை கிளிநொச்சி திரேசம்மாள் ஆலய பங்குத் தந்தை நிகழ்த்தினார்.
பொலிஸ் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்த போதும் பெருளவான மக்கள் உணர்வுபூர்வமாக வந்து கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment