May 12, 2015

சென்னையிலும் நிலநடுக்கம்: பயத்தில் வெளியே ஓடி வந்த மக்கள்! பீகாரிலும் 10 பேர் பலி!

இந்தியாவின் தலைநகர் டெல்லியை தொடர்ந்து சென்னையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறினர்.
சீனா, நேபாளம், இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. டெல்லி, பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கேரளா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
சென்னையில் பெசன்ட்நகர், சாந்தோம், கோடம்பாக்கம், நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.
சென்னையில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
டெல்லி, பீகார், உத்தரபிரதேசம், மேற்குவங்கம்
டெல்லி, பீகார், உத்தரபிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வீடுகள் கட்டடங்கள் குலுங்கியதால் காலை நேரத்தில் அலுவலகங்களில் வேலை செய்து கொண்டிந்தவர்களும், வீடுகளில் இருந்தவர்களும் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்
நிலநடுக்ம் டெல்லியில் சுமார் 30 வினாடிகள் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தை தொடர்ந்து, உடனடியாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பீகாரில் 10 பேர் பலி
இதனிடையே நிலநடுக்கத்திற்கு பீகாரில் 10 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக பீகாரில் முதலில் பகல் 12.36 மணி அளவில் முதல் நிலநடுக்கமும், அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது முறையாக பகல் 1.09 மணி அளவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகாரின் வடக்கு பகுதியில் உள்ள கிழக்கு சாம்பரான், மேற்கு சாம்பரான், மதுபானி, சுபால் உள்ளிட்ட இடங்களில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மொபைல் போன் சேவைகள் செயலிழப்பு
மேலும் டெல்லியில் மொபைல் போன் சேவைகளும் செயலிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளா
இந்நிலையில் கேரளாவிலும், குறிப்பாக கொச்சியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 7 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment