May 12, 2015

கைது செய்யும் திட்டத்துக்கு எதிராக கோத்தபாய உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

தன்னை கைது செய்வதற்ககு தடைவிதிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ உயர் நீதிமன்றத்தில் இன்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
தனது சட்டத்தரணியூடாக குறித்த மனுவை தாக்கல் செய்துள்ள கோத்தபாய ராஜபக்ஷ அந்த மனுவில் பிரதமர், அமைச்சரவை, பொலிஸ் மா அதிபர்,
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 44 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தன்னுடைய அடிப்படை மனித உரிமை மீறப்படுவதாகக் கூறும் கோத்தபாய ராஜபக்ஷ, பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு சவால் விடுக்கும் வகையில் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
கைது செய்தல் மற்றும் விசாரணை செய்யும் திட்டங்களில் பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு உள்ள அதிகாரத்தை கோத்தபாயராஜபக்ஷ தனது மனுவின் மூலம் சவாலுக்கு உட்படுத்தியுள்ளார்.
தன்னை கைது செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுத்து தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோத்தபாய ராஜபக்ஷ தனது மனுவில் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment