May 12, 2015

6 வருட சிறையின் பின் விடுதலையான முன்னாள் போராளி விடுதலையாகி இரு நாட்களில் விபத்தில் பலி !

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆறு வருடங்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு கொடிய சித்திரவதைகளை அனுபவித்த முன்னாள் விடுதலைப்புலிப் போராளி ஒருவர் விடுதலையான இரண்டாம் நாளே விபத்தில் சிக்கி உயிரிழந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது.

கிளிநொச்சியின் பூநகரியில் நேற்று முன்தினம் (10) நடந்த விபத்தில் வேலரசன் என்றழைக்கப்படும் பீலிக்ஸ் என்ற போராளியே உயிரிழந்துள்ளார்.

பூநகரி வலைப்பாட்டை சேர்ந்த இவர் பூநகரியில் நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

யுத்தத்தின் முடிவில் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட இவர், பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு கொடூரமான சித்திரவதைகளிற்கு முகம் கொடுத்து வந்தார்.

இறுதியாக அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து கடந்த 8ம் திகதி விடுதலையானார். இரண்டுநாட்கள் மட்டுமே உறவினர்களுடன் இருந்த நிலையில் விபத்தில் பலியான துயரம் நடந்துள்ளது.

No comments:

Post a Comment