April 22, 2015

பக்கத்துவீட்டு யுவதிக்கு மர்ம உறுப்பைக் காட்டி அலங்கோலப்பட்ட ஊர்காவற்துறை நபர்!

யாழ். ஊர்காவற்றுறை நாகதேசு பகுதியில், பக்கத்து வீட்டு யுவதிக்கு தனது மர்ம உறுப்பை காண்பித்த சந்தேகநபரை 35 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்ல ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான்
செல்வநாயகம் லெனின்குமார் புதன்கிழமை (22) அனுமதியளித்தார்.

சந்தேகநபர் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரின் வீட்டுக்கு பக்கத்து வீட்டுப் யுவதி தனிமையில் இருந்தபோது, மதுபோதையில் சென்ற சந்தேகநபர் தனது மர்ம உறுப்பை யுவதிக்கு காண்பித்துள்ளார்.

இது தொடர்பில் யுவதி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபரை கைது செய்து நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

No comments:

Post a Comment