April 20, 2015

முல்லைத்தீவில் சனசமூக நிலையங்களுக்கான தளபாட உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது!

இன்று (2015-04-20) பிற்பகல் 3 மணியளவில் முல்லைத்தீவு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரனால் இரு சனசமூக நிலையங்களுக்கான தளபாட உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
 வெட்டுவாய்க்கால் மற்றும் அளம்பில் தெற்கு சனசமூக நிலையங்களே ரவிகரனால் கடந்த ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் உள்வாங்கப்பட்டன. வருகின்ற ஆண்டுகளில் இன்னும் பல கிராமங்களை இத்திட்டத்தினுள் உள்வாங்கி , அதிகளவான மக்கள் ஊடகச் செய்திகளை வாசிக்கும் வாய்ப்பை வழங்குவதூடாக, ஆரோக்கியமான சனநாயகத்தை கட்டி எழுப்புவதே இங்கு இலக்காகிறது என்று நிகழ்வில் உரையாற்றிய ரவிகரன் தெரிவித்தார்..

No comments:

Post a Comment