April 19, 2015

பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்தே போட்டியிடும் - சுமந்திரன்!

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்தே போட்டியிடும் என்று அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அடுத்த தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டமைப்பு இணைந்து போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது.
எனினும் தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டமைப்பு வேறெந்த கட்சியுடனும் இணைந்து போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணையும் எண்ணம் இல்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment