February 19, 2015

பாரதிக்கு எதிராக திருக்கோயில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும்
தமிழீழவிடுதலைப்புலிகளின் முன்னால் ஆயுத போராளியுமான இனியபாரதிக்கு எதிராக இன்று காணாமல் போனோர், கடத்தப்பட்டோர் சம்பந்தமாக பாதிக்கப்பட்ட மக்கள் திருக்கோயிலில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை நடத்தியிருந்தனர்.

இப்பேரணியானது இன்று காலையில் திருக்கோயில் மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது இவ்வார்ப்பாட்டத்திற்கு த.தே.கூட்டமைப்பின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் மற்றும் த.தே.கூட்டமைப்பின் பிரதேசசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

அங்கு கூடியிருந்த மக்கள் இனியபாரதியை உடன் கைது செய்யுங்கள் இதுவரை காலமும் பாரதியும் அவரோடு சேர்ந்து இயங்கிய இராணுவப்புலனாய்வாளர்களும் செய்த அட்டூழியங்களுக்கு தீர்வைப்பெற்றுத்தாருங்கள் என்றும் கடந்தகாலங்களில் தங்களது உறவுகள்
கொன்று குவித்த அனைத்திற்கும் பாரதியே பொறுப்பானவர் என்றும் இவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் இவ்வாரானவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று மக்கள் ஆர்ப்பாட்டத்தின்போது கோசமிட்டிருந்தார்கள்.

இதுவரை காலமும் எங்களது பிரச்சனைகளை வெளியே கொண்டு வரமுடியாமல் இருந்தது ஆனால் இந்த நாட்டிலே ஓரளவு சுமூக நிpலை இருப்பதன் காரணமாக இவரையும் இவருடன் சேர்ந்து இயங்கிய ஒட்டுக்குழுக்களையும் உடனடியாக கைது செய்து அவர்களுக்கான தண்டனையை வழங்க வேண்டும் எனவும் வீதியை மறித்து போராட்டம் நடத்தினார்கள்.


Ampari 1
Ampari 2Ampari 12Ampari 11Ampari 3Ampari 4Ampari 10Ampari 5Ampari 6Ampari 7Ampari 8Ampari 9

No comments:

Post a Comment