February 19, 2015

காணாமற்போன வாலிபர் பாலத்தின் கீழ் சடலமாக!

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமற்போனதாகக் கருதப்படும் வாலிபர் ஒருவரது சடலம்  செங்கலடி கறுத்தப்பாலத்தின் கீழ்  இன்று
18.02.2015  புதன்கிழமை காலை  மீட்கப்பட்டதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.


உருக்குலைந்து துர்வாடை வீசிய நிலையில் காணப்பட்ட இச்சடலம் கொம்மாதுறை உமா மில் வீதியைச்சேர்ந்த 27 வயதுடைய சுந்தரம் மகேந்திர ராஜா என்பவருடையதென்றும் இவர் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டவரெனவும் அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர். ஏறாவூர்ப் பொலிஸார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.Batti 1Batti

No comments:

Post a Comment