February 19, 2015

வடமேற்கு லண்டனில் ஈகைப்பேரொளி முருகதாசனின் 6ம் ஆண்டு நினைவு வணக்கம்!

"என் இனத்தின் அழிவைத் தடுத்து நிறுத்தத் தவறிய உலகமே! உங்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப என்னுடைய இனிய உயிரை வழங்குகிறேன்" என ஐக்கிய
நாடுகள் அவை முன்பாக பெப்ரவரித் திங்கள் 12ஆம் நாள் தன் இன்னுயிரீந்த ஈகப்பேரொளி முருகதாசனின் ஆறாம் ஆண்டு நினைவெழுச்சிநாள் நிகழ்ச்சி வடமேற்கு லண்டனில் நடைபெறவுள்ளது. ஈகத்தின் உச்சமாகத் தீயினில் தன்னையே கொடுத்து, அனைத்துலகத்திடம் தமிழின அழிப்பைத் தடுத்து நிறுத்தக் கோரி, புலம்பெயர் தேசத்தில் புதிய புரட்சிக்கு வித்திட்டுத் தன்னுயிரீந்த ஈகப்பேரொளி முருகதாசனின் 6 ஆம் ஆண்டு நினைவெழுச்சிநாள் நிகழ்ச்சி பெப்ரவரித் திங்கள் 21 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 7 மணி தொடக்கம் 9 மணிவரை இலக்கம் 89 Malvern avenue , South Harrow , Middlesex , HA2 9ER எனும் முகவரியில் அமைந்துள்ள Andrew Roxburne Church இல் நடைபெறவுள்ளது. பிறர் வாழத் தனைக் கொடுத்த ஈகப்பேரொளி முருகதாசனின் நினைவெழுச்சிநாள் நிகழ்ச்சியில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் கலந்து கொள்ளும்படி பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் கேட்டுக் கொள்ளுகின்றனர். 

No comments:

Post a Comment