February 20, 2015

மாங்குளம் பொலிஸ் பிரிவு அகற்றப்பட்டது! வவுனியா, முல்லைத்தீவு நிலையங்களுடன் இணைப்பு!

போர் முடிந்ததுடன் மாங்குளம் பிரதேசத்தின் பாதுகாப்புக்காக ஸ்தாபிக்கப்பட்டிருந்த மாங்குளம் பொலிஸ் பிரிவு நேற்றுடன் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மாங்குளம் பொலிஸ் பிரிவில் இருந்த 6 பொலிஸ் நிலையங்களில் இரண்டு பொலிஸ் நிலையங்கள் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுடனும் 4 பொலிஸ் நிலையங்கள் வவுனியா பொலிஸ் பிரிவுடனும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாங்குளம் பொலிஸ் பிரிவு அகற்றப்பட்டுள்ளதையடுத்து தற்போது வடக்கில் 42 பொலிஸ் பிரிவுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை மாங்குளம் பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இரண்டு இராணுவ முகாம்களில் ஒன்றை அகற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

No comments:

Post a Comment