June 24, 2014

முன்சன் தமிழர் பண்பாட்டுக்கழகம் நடாத்திய தியாகி பொன் சிவகுமாரன் நினைவுக்கிண்ண சுற்றுப் போட்டிகள்!

யேர்மன் தேசியக்கொடி, தமிழீழ தேசியக் கொடியேற்றலுடன்ஆரம்பமாகியது. ஊதைபந்தாட்டம், கரப்பந்தாட்ட போட்டிகளில் Nürenburg,Alen,München நகரங்களிலிருந்து வீரர்கள் கலந்து கொண்டு கடும் போட்டிகளுக்கு மத்தியில் தங்களின் விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்தினார்கள்.

பார்வையாளர்களின் ஆரவாரமான ஊக்கம்,உற்சாகமும் விளையாட்டு வீரர்களை மேலும் அபாரமாக ஆடவைத்து வெற்றி மகிழ்ச்சியில் திளைத்தார்கள்  இறுதியில் பரிசளிப்பில் முன்சன்-தமிழாலய நிர்வாகி ஆசிரியைகள்,தமிழர் பண்பாட்டுக் கழகத்தவர்கள் வெற்றி வீரர்களுக்கு பதக்கங்கள்,கிண்ணங்களை வழங்கி மதிப்பளிப்பு செய்தார்கள் இவ்வண்ணம் நிகழ்வுகள் இனிதே
நிறைவேறிற்று.

பங்குபற்றிய விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் யாவரக்கும் தமிழர்பண்பாட்டுக் கழகம் தனது நன்றிகளைத்
தெரிவித்துக்கொள்கின்றது.




No comments:

Post a Comment