August 30, 2016

புலிகளுக்கு உதவினார் கோத்தா! - மங்கள சமரவீர குற்றச்சாட்டு!

யுத்தம் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் சிலர் வெளிநாடு செல்வதற்கு தேவையான நிதி உதவிகளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தா பெற்றுக்கொடுத்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மீது அமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார்.


 
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர், காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக அது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொடுக்க முடியும். காணாமல் போனோர் அலுவலகத்தை அமைத்த பின்னால் அடுத்த கட்ட நடவடிக்கையாக உண்மைகளை கண்டறியும் நீதிமன்றத்தை ஒத்த நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தவறுகள் ஏற்பட்டிருந்தால் அது தொடர்பில் தண்டனைகள் பெற்றுக்கொடுப்பதற்காக இது அமைக்கப்படவுள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment