August 30, 2016

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட மரண சான்றிதழ்களை மீளப்பெற வேண்டுமென வலியுறுத்து!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என அரசாங்கம் உறுதியாக கூறுமாயின், ஏற்கெனவே வழங்கப்பட்ட மரணச்சான்றிதழ்களை மீளப் பெறவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட தாயக மக்கள் மறுமலர்ச்சிக் கழகத் தலைவர் கலாநிதி ஏ.செல்வேந்திரன் தெரிவித்துள்ளார்.


காணாமல் போனோரை தேடித்தருமாறு கோரி மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்தோடு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சட்டம் மற்றும் அதன் அலுவலகம் ஊடாக ஒரு உறுதிமொழியை வழங்கவேண்டுமென குறிப்பிட்ட அவர், அதன் அடிப்படையிலேயே சான்றிதழ்களை வழங்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

குறித்த ஆர்ப்பாட்டத்தையடுத்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.அஸீஸிடம் காணாமல் போனோரின் உறவுகள் சார்பில் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment