August 28, 2016

வடக்கு மாகாணசபை உறுப்பினருக்கு எதிராக யாழ். முஸ்லிம்கள் போராட்டம்!

வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து யாழ். முஸ்லிம்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர்.
முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஐந்து சந்திப்பகுதியில் இன்று காலை ஒன்று கூடிய முஸ்லிம்கள் பல்வேறு சுலோகங்களுடன் குறித்த மாகாண சபை உறுப்பினரின் செயற்பாட்டிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

 
இதன் போது கடந்த 7 வருடங்களாக யாழ்- கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் எனும் பெயரில் அங்குள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் உள்ளடக்கியதாக யாழ் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு பாடுபடும் அமைப்பு இந்த போராட்டத்தை மக்களுடன் இணைந்து மேற்கொண்டிருந்தது. போராட்டத்தின் போது கலந்து கொண்டவர்கள் அனைவரும் மாகாண சபை உறுப்பினரின் செயற்பாடு பக்கச்சார்பானது எனவும் அவர் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை அரசியல் சாயம் பூச முயற்சிப்பதாக ஊடகங்க ளிற்கு தெரிவித்தனர்.



No comments:

Post a Comment