August 28, 2016

இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பான் கீ மூனுக்கு காட்டப் போகிறாராம் மங்கள!

இரண்டு நாள் பயணமாக இம்மாதம் 31ம் திகதி கொழும்பு வரும் ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூன் இலங்கைக்குள் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றங்களை அவருடைய கண்களாலேயே காண முடியும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.


 
கடந்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நியூயோர்க் பகுதியில் ஐ.நா செயலாளர் நாயகத்தை சந்தித்திருந்தபோது விடுத்திருந்த அழைப்பினை தொடர்ந்தே செயலாளர் நாயகம் 2 நாள் விஜயமாக இலங்கை வருகின்றார். விசேடமாக இலங்கைக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட அளவிலான மாற்றங்களை அவர் தன்னுடைய கண்களாலேயே பார்த்து கொள்ள முடியும்.

யாழ்ப்பாணம் மட்டுமல்லாமல் காலிக்கும் அவரை நாம் அழைத்துச் செல்வதன் ஊடாக வடக்கு, தெற்கு மாகாணங்களுக்கிடையில் உள்ள வேறுபாடுகளையும் அவருக்கு நாங்கள் காண்பிக்க போவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment