August 29, 2016

ஒலிம்பிக்கில் பங்கேற்ற 9 வீரர்களுடன் 46 அதிகாரிகள் ரியோ பயணம்! - விசாரணைக்கு உத்தரவு !

அண்மையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் சார்பில் 9 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.
இவர்களுடன் மொத்தமாக 46 அதிகாரிகளும் பிரேசில் சென்றிருந்தமை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய ஒலிம்பிக் கமிட்டிக்கு உத்தரவிட்டுள்ளார்.

 
தேசிய ஒலிம்பிக் கமிட்டி தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு எதிராக தொடர்ச்சியாக செய்யப்பட்டு வரும் முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தி இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது. தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் கடந்த ஐந்தாண்டு கால நடவடிக்கைகள் குறித்தும் இந்த அறிக்கையில் விளக்கம் அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment