July 1, 2016

சந்தேகப்படும் வகையில் கப்பல் போக்குவரத்தில் ஈடுப்பட்டிருந்த 27 பேர் கைது!

கொழும்பு துறைமுகத்தில் கப்பல்கள் நங்குரமிடும் பகுதியில் குறித்த கப்பலில் வந்தவர்களிடம் சுங்க திணைக்கள அதிகாரிகள் அடையாள சோதனை செய்ய முற்பட்டவேளையில் அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர்.


இந்நிலையில் குறித்த கப்பலை பிடிக்க இலங்கை சுங்கத்திணைக்கள அதிகாரிகள் கடற்படையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து, கடற்படையினர் இரண்டு வேக படகுகளை கொண்டு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில்,குறித்த கப்பலை காலி கடற்பரப்பில் வைத்து பிடித்துள்ளதோடு, விசாரணைகளுக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த கப்பல், பாகிஸ்தானிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது.காலி கடற் பரப்பில் சந்தேகப்படும் வகையில் போக்குவரத்தில் ஈடுப்பட்டிருந்த கப்பலொன்றை நேற்று இரவு பிடித்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலில் இருந்த 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment