May 29, 2016

இந்து மத அடையாளங்களை பௌத்தமாக மாற்றப்படுகின்றது- மனோ கணேஷன்!

இலங்கையில் காணப்படும் இந்து மத அடையாளங்களை பௌத்த மத அடையாளங்களாக மாற்றும் முயற்சிகள் தொடர்ந்தும்
முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்தார்.அகில இலங்கை இந்து மாமன்றத்தின் வைர விழா நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதற்கமைய திருகோணமலை கன்னியா வென்னீர் ஊற்றுக்கள் தற்பொழுது  தேசிய அகழ்வாராட்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு பௌத்த தலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கதிர்காமம் இந்து மத்தின் புனித தன்மையை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment