September 29, 2015

திருகோணமலையில் மாணவர்கள் குழு தாக்கியதில் மாணவன் மருத்துவமனையில்!

திருகோணமலை – கோமரங்கடவெல சிங்கள மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 12 ஆண்டு மாணவன் மீது 13 ஆம் ஆண்டு மாணவர்கள் எட்டு பேர் கொண்ட குழு இன்று (29) காலை தாக்கியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலையில் 12 ம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவனான கோமரங்கடவெல -கந்தமலாவ பகுதியைச் சேர்ந்த அகில மனோ டில்சான் சிரியானந்த (வயது 17 ) எனும் மாணவன் மீதே 13 ஆண்டு மாணவர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
தாக்குதலுக்குள்ளான மாணவன் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக கோமரங்கடவெல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment