May 27, 2015

பிறந்த குழந்தையை வடிகானில் வீசிய திருமணமாகாத பெண்: முன்னரும் அப்படிச் செய்தாராம்- மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம்!

சிசுவை கைவிட்டதாக கூறப்படும் தாய் கைதாகியுள்ளார்.
ஆலை­ய­டி­வேம்பு கோளாவில் பிர­தேச வடிகான் ஒன்­றி­லி­ருந்து கைவி­டப்­பட்ட நிலையில் மீட்­கப்­பட்ட ஆண் சிசுவின் தாய் என சந்­தே­கிக்­கப்­படும் பெண்­ணொ­ரு­வரை நேற்று முன்­தினம் இரவு கைது செய்­துள்­ள­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸார் தெரி­வித்­தனர்.

பொலி­ஸா­ருக்கு பெண் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து கிடைத்த இர­க­சிய தக­வ­லொன்றை அடுத்து பொலிஸார் கோளாவில் பிர­தே­சத்தில் வைத்து குறித்த பெண்ணைக் கைது செய்­துள்ளனர். திருமணமாகாத இந்தப் பெண், எற்கனவே இரண்டு குழந்தைகளை பிரசவித்து இப்படி கைவிட்டதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர். கைது செய்­யப்­பட்ட பெண் மருத்­துவப் பரி­சோ­த­னைக்­காக அக்­க­ரைப்­பற்று ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார்.
ஆலை­ய­டி­வேம்பு கோளாவில் பிர­தே­சத்தில் கடந்த 22ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை பி.ப. 12.30 மணி­ய­ளவில் வடிகான் ஒன்­றி­லி­ருந்து கைவி­டப்­பட்ட நிலையில் கிடந்த ஆண் சிசு­வொன்றை அப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் கண்­டெ­டுத்தார். பொலி­ஸா­ருக்கும் தகவல் கொடுத்தார்.
இத­னை­ய­டுத்து பொலிஸார் குறித்த சிசுவை அக்­க­ரைப்­பற்று ஆதார வைத்­தி­ய­சா­லையின் சிறுவர் பரா­ம­ரிப்புப் பிரிவில் அனு­ம­தித்­துள்­ளனர். பொலிசாரின் விசாரணையில், அந்தப்பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவர் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டு கைதாகியுள்ளார். இவர், ஏற்­க­னவே இரு பிள்­ளை­களை இவ்­வாறு பிர­ச­வித்­துள்­ள­தா­க கூறப்படுகிறது.
இதே­வேளை, கைவிடப்பட்ட இந்த சிசுவை தத்தெடுத்து வளர்க்க இரண்டு பெண்கள் முன்வந் துள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment