February 17, 2015

கிழக்கு மாகாண சபையில் அமைச்சுப் பதவியை ஏற்றது தமிழ் தேசிய கூட்டமைப்பு!

கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிழக்கு மாகாண சபையின் உதவி தவிசாளர் பதவியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுள்ளது. கிழக்கில் இணக்க அரசியலை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் 24ம் திகதி அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment