February 16, 2015

யாழில் தொலைபேசி கதைத்த பெண்ணுக்கு நடந்த கதி!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் அலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தவரின் கைப்பையில் இருந்த நகைகள்
திருட்டுப்போன சம்பவம் திங்கட்கிழமை (16); இடம்பெற்றதாக யாழ்ப்பாண பொலிஸார் கூறினர்.
பெண்ணொருவர் தனது சிறிய கைப்பையை தனதருகில் வைத்துவிட்டு, அலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த தருணம், அவருக்கு அருகில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் அதனை திருடிச் சென்றுள்ளார்.
அலைபேசியில் உரையாடிய பின்னர், தனது கைப்பையை தேடியபோதே தனது கைப்பை தொலைந்தமை பெண்ணுக்கு தெரியவந்தது.
இது தொடர்பில் பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

No comments:

Post a Comment